கச்சதீவு
வழக்கில் இருந்து தமிழக பாதிரியார் விடுதலை- சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த
தாயும் மகளும் கைது
[ சனிக்கிழமை,
19 யூலை 2014,
06:54.38 AM GMT ]tamilwin
தமிழக கிறிஸ்தவ
பாதிரியார் ஒருவருக்கு எதிராக சென்னை மேல் நீதிமன்றத்தில் கியூ பிரிவு
காவல்துறையினர் தாக்கல் செய்திருந்த வழக்கில் இருந்து குறித்த பாதிரியார் நேற்று
விடுதலை செய்யப்பட்டார். அத்துடன் வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
2012 ஆம் ஆண்டு
கச்சதீவு அந்தோனியார் திருவிழாவில் பங்கேற்றநிலையில் இலங்கைக்கு சென்ற கடைசி படகை
தவறவிட்டு நிர்க்கதியாக இருந்த உஷா என்ற இலங்கை பெண் மற்றும் அவருடைய மகள் நிரா
ஆகியோரை வணக்கத்துக்குரிய மைக்கல் ராஜ் என்ற பாதிரியர் தாம் சென்ற படகில்
இராமேஸ்வரத்துக்கு அழைத்து சென்றார்.
இது தொடர்பில்
அவர் உடனடியாக பொலிஸாருக்கும் அறிவித்திருந்தார். எனினும் கியூ பிரிவு
காவல்துறையினர் குறித்த பாதிரியார் வெளிநாட்டவர்களை இந்தியாவுக்குள் அழைத்து
வந்ததாக குற்றம் சுமத்தியிருந்தனர்.
இதனையடுத்து
பாதிரியார் காவல்துறையினர் பணிப்பாளர் நாயகத்திடம் விடயத்தை கொண்டு சென்ற நிலையில்
அவர் காவல்துறையினரின் குற்றச்சாட்டு விலகிக் கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.
எனினும் இதற்கு
மாறாக கியூ பிரிவினர் பாதிரியார் மீது வழக்கை தாக்கல் செய்தனர்.
இதனை ஆட்சேபித்து
பாதிரியார் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை நீதிமன்றம் நேற்று பாதிரியாரை
வழக்கில் இருந்து விடுதலை செய்தது, அத்துடன்
வழக்கையும் தள்ளுபடி செய்தது.
Published: Tuesday, April 20, 2010, 14:04 [IST] oneindia
ரோம்: 10 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில்
ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த பாதிரியார் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில்
வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 14 வருட சிறைத்
தண்டனை கிடைக்கும் என அவரது வக்கீல் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தைச்
சேர்ந்தவர் டேவிட். இத்தாலியின் ரோம் நகரில் பாதிரியாராக உள்ளார். 40 வயதான இவர் ரோம் அருகே உள்ள டெரமா என்ற நகரில்
வசித்து வருகிறார். இவர் 10 வயது சிறுமியை
பாலியல் ரீதியாக சித்திரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து டேவிட்
கைது செய்யப்பட்டார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அவர் கடந்த வாரம்
விடுவிக்கப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டை
டேவிட் தற்போது ஒத்துக் கொண்டுள்ளார். இதையடுத்து விரைவில் அவர் மீதான வழக்கின்
விசாரணை தொடங்கவுள்ளது. அவருக்கு 14 ஆண்டு சிறைத்
தண்டனை கிடைக்கும் என டேவிட்டின் வக்கீல் கியோவன்னி ஜெபியா கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜெபியா கூறுகையில், டெரமா நகரில்
உள்ள தனது வீட்டில் டேவிட் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அங்குள்ள கான்வென்ட்டில்
வார இறுதி பிரார்த்தனையில் அவர் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. தற்போது தனது
வீட்டில் பிரார்த்தனை செய்து கழித்து வருகிறார் டேவிட் என்றார் ஜெபியா. கடந்த
ஆண்டு டிசம்பர் 19ம் தேதி
டேவிட்டின் பெற்றோர் வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த நிலையில், அப்பகுதியில் உள்ள 10 வயது சிறுமி டேவிட் வீட்டுக்கு வந்திருந்தார்.
அப்போது அவருக்கு சான்டா கிளாஸ் பொம்மையைப் பரிசாக அளித்த டேவிட், அச்சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில்
ஈடுபட்டுள்ளார். சிறுமியின் அந்தரங்க பகுதிகளில் கையை வைத்து அக்கிரமம்
செய்துள்ளார். அவரிடமிருந்து மீண்டு வந்த சிறுமி தனது பெற்றோரிடம் இதைத்
தெரிவிக்கவே அவர்கள் போலீஸில் புகார் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து டேவிட் கைது
செய்யப்பட்டார். தற்போது தனது குற்றத்தை அவர் ஒத்துக் கொண்டதால் அவர் மீதான
விசாரணை விரைவில் தொடங்கவுள்ளது. அவருக்கு 14 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் வாய்ப்புகள்
உள்ளன. 1987ம் ஆண்டு
பாதிரியாராக நியமிக்கப்பட்டவர் டேவிட். அதன் பின்னர் அவர் இத்தாலிக்கு வந்து அங்கு
செயல்படத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உன்னை இந்தக்
கேள்வி கேட்க விரும்புகிறேன். இன்றைக்கு நீ திடீரென்று மரித்தால், உன்ஆவி உன்னை விட்டுப் பிரிந்தால், உன் ஜீவன் உன்னில் இருந்து எடுக்கப்பட்டால்,
உன் உயிர் இன்றைக்குப்
போனால், உன் ஆத்மா
எங்கேபோகும்? நீ மோட்சம்
போவாயா? நரகம் போவாயா?
இதைக் குறித்து நீ
ஒருபோதும் நினைத்திராமல் இருந்திருக்கலாம். இன்றைக்கு, உன்ஜீவனை தம் கையில் வைத்திருக்கும் தேவனுடைய
சமூகத்தில் உன்னை நிறுத்தி, இதை வாசிக்கும்
உன்னிடத்தில், இதை
வாசிக்கும்உன்னிடத்தில் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன். இன்றைக்கு நீ மரித்தால்,
உன் ஆத்துமா எங்கே போகும்?
நீ மரிக்க
மாட்டாயா? சுகமும் பலமும்
இருக்கிறதென்று தேற்றிக் கொள்கிறாயோ? ஜாக்கிரதை. உன் சுகத்திற்கு ஒரு முடிவு வரும். உன்அழகுக்கு ஒரு முடிவு வரும்.
உன் ஆடம்பரத்திற்கு ஒரு முடிவு வரும். உன் படிப்புக்கு ஒரு முடிவு வரும். உன்
உல்லாசத்திற்கு ஒரு முடிவுவரும். உன் வாலிபத்திற்கு ஒரு முடிவு வரும். உன்
ஷோக்குக்கு ஒரு முடிவு வரும். உன் ஆடம்பரத்திற்கு ஒரு முடிவு வரும். உன்
குடும்பவாழ்க்கைக்கு ஒரு முடிவு வரும். ஒருவேளை அது இறைக்கே, இன்னும் கொஞ்ச நேரத்தில் இருக்கலாம். “ உன் வாழ்நாள் கொஞ்சமே, உன்ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலம் தோன்றி பின்பு தோன்றாமல் புகைகின்ற
புகையைப்போல் இருக்கிறது.” (யாக்கோபு.4:14).
”ஸ்திரீயினிடத்தில்
பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான். அவன்
பூவைப்போலப் பூத்துஅறுப்புண்கிறான்; நிழலைப்போல நிலைநிற்காமல் ஓடிப்போகிறான்…ஒரு மரத்தைக்குறித்தாவது நம்பிக்கையுண்டு;
அதுவெட்டிப்போடப்பட்டாலும்
திரும்பத் தழைக்கும், அதின்
இளங்கிளைகள் துளிர்க்கும்; அதின் வேர்
தரையிலே பழையதாகி, அதின்
அடிக்கட்டைமண்ணிலே செத்தாலும், தண்ணீரின்
வாசனையினால் அது துளிர்த்து, இளமரம்போலக்
கிளைவிடும். மனுஷனோவென்றால் செத்தபின்ஒழிந்துபோகிறான், மனுபுத்திரன் ஜீவித்துப்போனபின் அவன் எங்கே?
தண்ணீர் ஏரியிலிருந்து
வடிந்து, வெள்ளம்
வற்றிச்சுவறிப்போகிறதுபோல, மனுஷன்
படுத்துக்கிடக்கிறான்; வானங்கள்
ஒழிந்துபோகுமளவும் எழுந்திருக்கிறதும் இல்லை, நித்திரை தெளிந்துவிழிக்கிறதும் இல்லை”
(யோபு.14:1,2,7-12).
“நீர் மனுஷரை
நிர்த்தூளியாக்கி, மனுபுத்திரரே,
திரும்புங்கள் என்கிறீர்.
அவர்களை வெள்ளம்போல் வாரிக்கொண்டுபோகிறீர்; நித்திரைக்குஒத்திருக்கிறார்கள்; காலையிலே முளைக்கிற புல்லுக்கு
ஒப்பாயிருக்கிறார்கள். அது காலையிலே முளைத்துப் பூத்து, மாலையிலேஅறுப்புண்டு உலர்ந்துபோம்” (சங்கீதம்.90:3,5,6).
” அன்றியும்,
ஒரேதரம் மரிப்பதும்,
பின்பு
நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு
நியமிக்கப்பட்டிருக்கிறது” (எபிரேயர்.9:27).
இந்த
வேதவசனங்களின்படி உன் வாழ்நாள் நிலையற்றதாயிருக்கிறது. நீ நினையாத நேரத்தில்,
மரணம் உன்னைப்
பிடிக்கும். நீ பாவத்தில்வாழ்ந்து, பாவியாய்
மரித்தால், நிச்சயமாய் நரகம்
போவாய். அங்கே அக்கினி அவியாமலும், புழு சாகாமலும்
இருக்கும். அது கந்தகமும்அக்கினியும் எரிகிற கடல். அங்கே அழுகையும் பற்கடிப்பும்
இருக்கும். அது புறம்பான இருள். நீ பாவியாய் மரித்தால், இந்த இடத்திற்குத்தான்போவாய். நீ மோட்சம்
பரலோகம் போக வேண்டுமென்றால், உன் பாவங்களில்
இருந்து விடுதலை, இரட்சிப்பு அடைய
வேண்டும்.
நீ பாவியாய்
மரிப்பதில், இயேசு
இரட்சகருக்கு கொஞ்சமும் இஷ்டம் இல்லை. ” துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ?அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது
அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்” (எசேக்கியேல்.18:23). நண்பனே, உன்னை பாவங்களில் இருந்து
விடுவித்து, நரக தண்டனைக்கு
உன்னை விலக்கி இரட்சிக்க இயேசு காயப்பட்டுரத்தம் சிந்தியிருக்கிறார். இயேசு
மரித்திருக்கிறார். உன்னை இரட்சித்து, பாவம் செய்யாதபடி உன்னைக் காத்துக் கொள்ள இயேசுஉயிரோடிருக்கிறார்! இந்த
இயேசுவை, இன்றைக்கு நீ
விசுவாசித்து, உன்
இருதயத்திற்குள் விசுவாத்தால் ஏற்றுக் கொள். அப்பொழுது உன்எல்லா பாவங்களிலும்
இருந்து விடுதலை பெற்று, பரலோகம்
செல்வாய். நீ இயேசுவை வேண்டாம் என்று தள்ளினால், நீ நினையாத நேரத்தில்மரணம் உன்னை
பிடிக்கும்போது, நீ மரித்து கீழே
போவாய். ஆகையால் உன் இரட்சகர் இயேசுவின் மேல் விசுவாசம் வைக்கும்படியாகஅன்பாய்
அவரிடத்தில் உன்னை இன்று அழைக்கிறோம். இயேசுவினிடத்தில் வா! நீ பரலோகம் போகலாம். –
இன்றைக்கு நீ மரித்தால்
எங்கேபோவாய்? திருடனைப் போல சாவு வரும் திடுக்கிடுவாய் நீயும் அப்போ! பாம்பின் வாயில் தவளை போல,
பரிதவிப்பாய், பரிதவிப்பாய்!
(பழைய கைப்பிரதி ஒன்றில் இருந்து)
SATURDAY, 21 DECEMBER 2013 20:04 TAMILCH
அழுத்தி தொடர்ந்து வாசிக்கவும்
அழுத்தி தொடர்ந்து வாசிக்கவும்


Keine Kommentare:
Kommentar veröffentlichen