swiss time

weltrekord

↑ Grab this Headline Animator

«Hoffnung für Frieden zwischenHindus, Muslimen, Buddhisten und Christen Sri Lanka».

Rev.David Jayanadan Appukutti


Montag, 14. Juli 2014

BBC news


BBC news කතෝලික සභාව
கர்தினால் லூர்துசாமி வாட்டிகனில் மரணம்
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 4 ஜூன், 2014 - 20:45 ஜிஎம்டி

கத்தோலிக்கத் திருச்சபையில் கர்தினால் பதவி வரை உயர்ந்த ஒரே தமிழரான துரைசாமி சைமன் லூர்துசாமி ஜூன் மாதம் 2ஆம் தேதியன்று காலமானார்.
1924ஆம் வருடம் பிப்ரவரி 5ஆம் தேதியன்று பிறந்த இவர், ரோமன் க்யூரியாவில் பணியாற்றிய ஒரே ஆசியக் கண்டத்தவர்.

செஞ்சியிலுள்ள கல்லேரி என்ற சிற்றூரில் பிறந்த இவர், திண்டிவனம், கடலூர் ஆகிய நகரங்களில் தனது பள்ளிக் கல்வியைப் பெற்றவர்.
கல்லூரிக் கல்வியை சென்னை லயோலா கல்லூரியில் படித்த இவர், திருச்சபை சட்டக் கல்வியை ரோமில் படித்து, டாக்டர் பட்டம் பெற்றார். 1962ல் புதுவையில் ஆயராக நியமிக்கப்பட்ட அவர், 1968ல் பெங்களூர் பேராயராக நியமிக்கப்பட்டார். 71ல் ரோமிலிருக்கும் மறைபரப்புப் பேராயத்தின் இணைச் செயலராக உயர்ந்தவர் அடுத்த ஆண்டே ரோம் அர்பன் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார்.
1985ல் மே 25ஆம் தேதி திருத்தந்தை இரண்டாம் ஜான்பாலால் கார்தினலாக உயர்த்தப்பட்டார் லூர்துசாமி. 1996ல் கார்டினல் அருட்பணியாளர் என்ற நிலையைத் தேர்ந்துகொண்டார் லூர்துசாமி.
வியாழக்கிழமையன்று காலை பதினோரு மணிக்கு செயிண்ட் பீட்டர் பேராலய பீடத்தில் கார்தினல் குழுத் தலைவர் ஆஞ்சலோ சொடானோ அடக்கத் திருப்பலி ஆற்றியபிறகு, போப் பிரான்சிஸ் பிரியாவிடை ஜெபங்களைச் செய்யவிருக்கிறார்.
அதற்குப் பிறகு சனிக் கிழமையன்று அவரது உடல் புதுவைக்கு கொண்டுவரப்படுகிறது. அன்றும் ஞாயிற்றுக் கிழமையும் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டிருக்கும். பிறகு, திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு அவரது உடல் புதுவை தூய அமலோற்பவ அன்னை பேராலயத்தில் அடக்கம் செய்யப்படவிருக்கிறது.
இந்தியாவில் போப்பின் தூதரான சால்வாத்தோர் பென்னாச்சியோ உள்ளிட்ட இந்தியாவைச் சேர்ந்த பல பேராயர்கள் இந்த இறுதிச் சடங்கில் கலந்துகொள்கின்றனர்.
எளிமையும், கடின உழைப்பும் நிறைந்த மனிதராக அறியப்பட்ட கார்தினல் லூர்துசாமி, அவர் பெங்களூர் மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றியபோது, அதனை ஒரு முன்மாதிரி மறைமாவட்டமாக்க அவர் ஆற்றிய பணிகள் இப்போதும் நினைவுகூரப்படுகின்றன.


BBC news
இரு முன்னாள் போப்பாண்டவர்கள் புனிதர்களாக பிரகடனம் - காணொளி
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 27 ஏப்ரல், 2014 - 11:17 ஜிஎம்டி
கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமைப் பீடமாம் வத்திகானத்தில் இதற்கு முன்பெப்போதும் இல்லாத விதமாக நடந்த ஒரு வைபவத்தில், முன்னாள் போப்பாண்டவர்களான 23ஆம் ஜான் அவர்களையும் இரண்டாம் ஜான் பால் அவர்களையும் இந்நாள் பாப்பரசரான பிரான்சிஸ் புனிதர்களாக அறிவித்துள்ளார்.
சரித்திரத்தில் முதல்முறையாக இரண்டு போப்பாண்டவர்கள் ஒரே நேரத்தில் புனிதர்களாக அறிவிக்கப்படுகின்ற இந்த வைபவத்தில் பிரான்சிஸுக்கு முன்பாக போப்பாண்டவராக இருந்த பெனெடிக்டும் கலந்துகொண்டுள்ளார்.
புனிதர்களாக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் போப்பாண்டவர்களின் பெரிய உருவப்படங்கள் வத்திகானத்திலுள்ள புனித பீட்டர் சதுக்கத்தை அலங்கரித்துள்ளன.
அங்கும் சுற்றியுள்ள வீதிகளிலுமாக ஏராளமான மக்கள் கூடி சிறப்பு திருப்பலி பூசையில் பங்கேற்று வருகின்றனர்.
இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக உலகெங்கிலும் இருந்தும் பல லட்சம் கத்தோலிக்கர்கள் ரோம் நகருக்கு வந்துள்ளனர்.
தவிர கோடிக்கணக்கானோர் இந்த வைபவத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பை பார்த்துவருகின்றனர்.
இவை குறித்த ஒலிக்குறிப்பற்ற ஒரு காணொளி.


சிறார் பாலியல் துஷ்பிரயோகம்: வத்திக்கான் மீது ஐ.நா கண்டனம்
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 5 பிப்ரவரி, 2014 - 15:39 ஜிஎம்டி

ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார்கள் ஆயிரக்கணக்கான சிறுவர், சிறுமியர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வதை அனுமதிக்கும் கொள்கைகளை, வத்திக்கான் , தொடர்ந்து கடைப்பிடித்தது என்று ஐ.நா மன்றம் விமர்சித்திருக்கிறது.
சிறார்களின் உரிமைகள் பாதுகாப்புக்கான ஐ.நா மன்றக் குழு, ( சி.ஆர்.சி), சிறார்களைத் துஷ்பிரயோகம் செய்ததாக அறியப்படும் அல்லது சந்தேகிக்கப்படும் பாதிரியார்களை போப் உடனடியாக அகற்றவேண்டும் என்று கூறியிருக்கிறது.
மேலும், ஒரு பாலுறவு, கர்ப்பத்தடை மற்றும் கருச்சிதைவு ஆகிய விஷயங்கள் குறித்து வத்திக்கானின் அணுகுமுறைகளையும் அது கடுமையாக விமர்சித்திருக்கிறது.
ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமைப் பீடமான வத்திக்கான், ஏற்கனவே , திருச்சபைக்குள் சிறார்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுக்க கமிஷன் ஒன்றை நியமித்திருக்கிறது.
இந்த கமிட்டியின் அறிக்கை வத்திக்கானைக் கட்டுப்படுத்தாது. அதன் பரிந்துரைகளை அமல்படுத்தும் அதிகாரங்கள் கொண்ட அமைப்பும் அங்கு இல்லை.
'குற்றமிழைத்தப் பாதிரியார்களுக்குப் பாதுகாப்பு'
தாங்கள் செய்த குற்றங்களை மறைத்தபாதிரியார்கள் குறித்த கோப்புகளை போப் வெளிப்படுத்த வேண்டும், அதன் மூலம் அவர்கள் மீது பொறுப்பை சுமத்த முடியும் என்று ஐ.நா மன்ற சிறார்கள் உரிமைக் குழு தனது அறிக்கையில் கூறியிருக்கிறது.
நடந்த குற்றங்களின் அளவை போப் ஒப்புக்கொள்ளவில்லை என்பது பற்றி தாங்கள் கவலை அடைந்திருப்பதாகவும் ஐ.நா குழு கூறியது.
குற்றமிழைத்த பாதிரியார்களை அவர்கள் பங்குத் தந்தையாக இருக்கும் பகுதியிலிருந்து வேறொரு பகுதிக்கு இடம் மாற்றுவது, சில சமயங்களில் நாடு விட்டு நாடு மாற்றுவது போன்ற நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்ட்தையும் அது கண்டித்திருக்கிறது.
பல நாடுகளில் சிறுவர் சிறுமியர் இன்னும் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்படக்கூடிய ஆபத்தில்தான் இருக்கிறார்கள் என்றும், இக்குற்றத்தில் ஈடுபட்ட பல பாதிரியார்கள் இன்னும் சிறார்களுடன் தொடர்பில்தான் இருப்பதாக்க் கூறப்படுதாகவும் இந்தக் குழு கூறியது.
கடந்த மாதம் வத்திக்கான் அதிகாரிகளை ஐ.நா குழு வெளிப்படையாக விசாரணை செய்து, இது குறித்த தகவல்களை வத்திக்கான் ஏன் வெளியிடக்கூடாது என்றும், எதிர்காலத்தில் இது போன்ற துஷ்பிரயோகங்கள் நடக்காமல் இருக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் கேள்விகளை எழுப்பியது.
ஆனால் துஷ்பிரயோகங்கள் குறித்த தரவுகளை, மற்றொரு நாடு கேட்டால் மட்டுமே, அதுவும், சட்டரீதியான நடவடிக்கைகளின் ஒரு அங்கமாகவே, தன்னால் தரமுடியும் என்று கூறி, ஐ.நா மன்றத்தின் கோரிக்கையை டிசம்பரில் வத்திக்கான் நிராகரித்துவிட்டது.
வத்திக்கான் கருத்து
இந்த விசாரணை அறிக்கை குறித்து தீவிரமாக ஆராயப்படும் என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது.
கருக்கலைப்பு, கருத்தடை மற்றும் ஒருபால் உறவு ஆகியவை குறித்த தமது நிலைப்பாட்டையும் கத்தோலிக்கத் திருச்சபை திருத்திக் கொள்ள வேண்டும் என்ற ஐ நாவின் அறிவுரைகள் கத்தோலிக்க போதனைகளில் குறுக்கிடும் ஒரு நடவடிக்கையாகவே உள்ளது என்று வத்திக்கான் பதிலடி கொடுத்துள்ளது.



சிறார் பாலியல் துஷ்பிரயோகம்: 2 ஆண்டுகளில் 400 பாதிரியர் நீக்கம்
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 18 ஜனவரி, 2014 - 11:17 ஜிஎம்டி

சிறார் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பான குற்றச்சாட்டில் வத்திக்கான் திருச்சபை தலைமை பீடத்தால் மதபோதகர் அந்தஸ்து பறிக்கப்பட்ட கத்தோலிக்க பாதிரியரின் எண்ணிக்கை விபரங்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் பாப்பரசர் பெனடிக்ட், 2011-ம், 2012-ம் ஆண்டுகளில் கிட்டத்தட்ட 400 பாதிரியரை மதபோதகர் பொறுப்புகளிலிருந்து நீக்கியுள்ளதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

கடந்த ஆண்டுகளில் மதகுரு பொறுப்புகளிலிருந்து தடைசெய்யப்பட்ட பாதிரிமாரிலும் பார்க்க இந்த எண்ணிக்கை மிகப் பெரிய அதிகரிப்பு என்று கருதப்படுகிறது.
ஜெனீவாவிலுள்ள ஐநா ஆணையத்தின் முன்பாக இந்த வாரத்தின் ஆரம்பத்தில் ஆஜரான வத்திக்கான் அதிகாரிகள் சமர்ப்பித்திருந்த ஆவணங்களிலேயே இந்த புள்ளிவிபரங்கள் தெரியவந்துள்ளன.
பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கு உள்ளான சம்பவங்களை மட்டுமே வத்திக்கான் திருச்சபை இதுவரை அறிக்கையிட்டுள்ளது.
பாதிரிமாரின் பாலியல் துஷ்பிரயோக விவகாரங்களை கத்தோலிக்க திருச்சபை தலைமை மூடிமறைத்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் இருந்துவருகின்றன.
இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சிவில் அதிகாரிகளுக்கு முறையிடாமல், சம்பந்தப்பட்ட பாதிரிமாரை வேறு கத்தோலிக்க பங்குப் பிரிவுகளுக்கு இடமாற்றம் செய்துள்ளமை தொடர்பில் வத்திக்கான் மீது விமர்சனங்கள் உள்ளன.








BBC news
'அல்லா' வழக்கு:கிறித்தவர்கள் மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் தள்ளுபடி
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 23 ஜூன், 2014 - 05:31 ஜிஎம்டி
மலேசியாவில் சிறுபான்மைக் கிறித்தவர்கள் தங்கள் கடவுளைக் குறிக்க 'அல்லா' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவற்கு எதிராக உயர்நீதிமன்றம் விதித்த தடையை அந்நாட்டின் உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது.
இது தொடர்பாக நாட்டின் கத்தோலிக்கர்கள் தொடர்ந்த வழக்கின் மேல் முறையீட்டு மனுவை நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4- 3 என்ற வாக்குகளில் நிராகரத்து தள்ளுபடி செய்தனர்.

மலேசியாவில் 2007லிருந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரம், கத்தோலிக்கத் திருச்சபையின் செய்திப் பத்திரிகையான, 'ஹெரால்ட்' இதழால் 2009ல் முதலில் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. முதல் நீதிமன்றத்தில் கத்தோலிக்கர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்தது. ஆனால் அதை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
பின்னர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கத்தோலிக்கர்கள் உச்சநீதிமன்றத்துக்கு மேல் முறையீடு செய்தனர்.
ஹெரால்ட் பத்திரிகையின் மலாய் மொழிப் பதிப்பில், முதலில் அல்லா என்ற சொல் கடவுளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டதை எதிர்த்து எழுந்த சர்ச்சையை அடுத்து, அரசால் இந்தப் பதத்தை கிறித்தவர்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது.
ஆனால், கடவுள் என்ற பொருளில் வழங்கப்படும், அல்லா என்ற சொல்லை, தங்கலது கடவுளைக் குறிக்கப் பல நூற்றாண்டுகளாகவே தாங்கள் பயன்படுத்திவருவதாகக் கிறித்தவர்கள் வாதிட்டனர். இந்த வார்த்தையை மலாய் மொழியில் கடவுளர்களைக் குறிக்க அனைத்து மதத்தினரும் பயன்படுத்துகின்றனர்.
ஆனால் இந்த வார்த்தையைக் கிறித்தவர்கள் பயன்படுத்துவது முஸ்லீம்களைக் குழப்பிவிடும் என்றும், சில முஸ்லீம்கள் மதம் மாறவும் அது வழி செய்யும் என்றும் அரசு கூறியது.
இந்தத் தீர்ப்பு தங்களுக்கு ஏமாற்றமளிப்பதாக, ஹெரால் பத்திரிகையின் ஆசிரியர் அருட்தந்தை லாரான்ச் ஆண்ட்ரூ கூறினார். இது சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைப் பற்றி எதுவும் கூறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஆனால் நீதிமன்றத்துக்கு வெளியே காத்திருந்த முஸ்லீம் ஆர்வலர்கள் இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இந்தத் தீர்ப்பு வழக்குகள் முடிவடைவதைக் குறிப்பதாகக் கூறிய திருச்சபைக்காக வாதாடிய வழக்கறிஞர் எஸ்.செல்வராஜா, முஸ்லீம் அல்லாதவர்கள் அல்லா என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்கு ஒட்டுமொத்தத் தடையை இது விதிப்பதாகக் கூறினார்.
ஆனால் இந்தத் தீர்ப்பை மறு பரீசலனை செய்ய திருச்சபை கோரக்கூடும் என்று சில மலேசிய பத்திரிகைகளில் வெளிவந்திருக்கும் செய்திகள் கூறுகின்றன.

BBC news
தொலைக்காட்சி பாடகர் போட்டியில் 25 வயது கன்னியாஸ்திரி வெற்றி
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 6 ஜூன், 2014 - 09:58 ஜிஎம்டி

உலகத் தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சியான த வாய்ஸ்பாடகர் போட்டியின் இத்தாலிய வடிவ நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் கத்தோலிக்க கன்னியாஸ்திரி ஒருவர் வெற்றிபெற்றுள்ளார்.
இந்தப் போட்டியில் பங்குகொண்டது முதல் அருட்சகோதரி ஸோர் கிறிஸ்தீனா இணையதளம் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றிருந்தார்.
கன்னியாஸ்திரி உடையுடன் கழுத்தில் சிலுவையுடன் ஸோர் கிறிஸ்தீனா தனது வெற்றிக்காக கடவுளுக்கு நன்றி கூறினார்.
இவர் முதன்முதலாக இந்தப் போட்டிக்குத் தெரிவாவதற்காகப் பாடிய பாடல் ( Alicia Key- இன் No One என்ற பாடல்) யூடியூப் இணையதளத்தில் ஏற்கனவே 50 மிலியன் தடவைகளுக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது.
ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையை சாதாரண மக்களிடம் மேலும் நெருக்கமாகக் கொண்டுசெல்ல வேண்டும் என்ற பாப்பரசர் பிரான்சிஸின் வேண்டுகோளை பின்பற்றியே தான் இந்தப் போட்டியில் பங்குபற்றியதாக 25 வயதான அருட்சகோதரி கிறிஸ்தீனா கூறினார்.

BBC news
பாதிரியாரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டோருடன் போப் இன்று சந்திப்பு
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 7 ஜூலை, 2014 - 06:39 ஜிஎம்டி


ரோமன் கத்தோலிக்கப் பாதிரியார்களால் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டவர்களை போப் பிரான்ஸிஸ் இன்று திங்கட்கிழமையன்று சந்திக்கிறார்.
பிரிட்டன், ஜெர்மனி மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளில் இது போன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்ட ஆறு பேரும் அவர் தினசரி நடத்தும், தனியான காலை நேர வழிபாடு ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு பின்னர் அவருடன் பேசுவார்கள்.


போப் பிரான்ஸிஸ் 16 மாதங்களுக்கு முன்னர் போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து இத்தகைய சந்திப்பு நடப்பது இதுவே முதன் முறையாகும்.

இது போல ரோமன் கத்தோலிக்கப் பாதிரியர்களின் பாலியல் துஷ்பிரயோகத்தைத் தான் சகித்துக்கொள்ளப் போவதில்லை என்று கூறியிருக்கும் போப் பிரான்ஸிஸ், இதைக் கையாள்வது திருச்சபையின் நம்பகத்தன்மைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறியிருக்கிறார்.

ஆனால் பாதிக்கப்பட்டவர்களை முன்பே சந்திக்காதது குறித்து அவர் மீது விமர்சனங்கள் எழுந்திருந்தன.

குற்றம் செய்யும் பாதிரியார்களை எப்படிக் கையாள்வது என்பது குறித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு எத்தகைய பாதுகாப்பு வழங்குவது என்பது குறித்தும் பரிசிலிக்க குழு ஒன்றை போப் அமைத்திருக்கிறார்.


Keine Kommentare:

Kommentar veröffentlichen

Translate

Powered By Blogger

Beliebte Posts

https://plus.google.com/+DavidJayanadanAppukutti/posts