swiss time

weltrekord

↑ Grab this Headline Animator

«Hoffnung für Frieden zwischenHindus, Muslimen, Buddhisten und Christen Sri Lanka».

Rev.David Jayanadan Appukutti


Donnerstag, 17. Juli 2014

Jesus - பாதிரியார்


                                                                       

கச்சதீவு வழக்கில் இருந்து தமிழக பாதிரியார் விடுதலை- சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த தாயும் மகளும் கைது
[ சனிக்கிழமை, 19 யூலை 2014, 06:54.38 AM GMT ]tamilwin

தமிழக கிறிஸ்தவ பாதிரியார் ஒருவருக்கு எதிராக சென்னை மேல் நீதிமன்றத்தில் கியூ பிரிவு காவல்துறையினர் தாக்கல் செய்திருந்த வழக்கில் இருந்து குறித்த பாதிரியார் நேற்று விடுதலை செய்யப்பட்டார். அத்துடன் வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
2012 ஆம் ஆண்டு கச்சதீவு அந்தோனியார் திருவிழாவில் பங்கேற்றநிலையில் இலங்கைக்கு சென்ற கடைசி படகை தவறவிட்டு நிர்க்கதியாக இருந்த உஷா என்ற இலங்கை பெண் மற்றும் அவருடைய மகள் நிரா ஆகியோரை வணக்கத்துக்குரிய மைக்கல் ராஜ் என்ற பாதிரியர் தாம் சென்ற படகில் இராமேஸ்வரத்துக்கு அழைத்து சென்றார்.
இது தொடர்பில் அவர் உடனடியாக பொலிஸாருக்கும் அறிவித்திருந்தார். எனினும் கியூ பிரிவு காவல்துறையினர் குறித்த பாதிரியார் வெளிநாட்டவர்களை இந்தியாவுக்குள் அழைத்து வந்ததாக குற்றம் சுமத்தியிருந்தனர்.
இதனையடுத்து பாதிரியார் காவல்துறையினர் பணிப்பாளர் நாயகத்திடம் விடயத்தை கொண்டு சென்ற நிலையில் அவர் காவல்துறையினரின் குற்றச்சாட்டு விலகிக் கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.
எனினும் இதற்கு மாறாக கியூ பிரிவினர் பாதிரியார் மீது வழக்கை தாக்கல் செய்தனர்.
இதனை ஆட்சேபித்து பாதிரியார் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை நீதிமன்றம் நேற்று பாதிரியாரை வழக்கில் இருந்து விடுதலை செய்தது, அத்துடன் வழக்கையும் தள்ளுபடி செய்தது.


Published: Tuesday, April 20, 2010, 14:04 [IST] oneindia
ரோம்: 10 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த பாதிரியார் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 14 வருட சிறைத் தண்டனை கிடைக்கும் என அவரது வக்கீல் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் டேவிட். இத்தாலியின் ரோம் நகரில் பாதிரியாராக உள்ளார். 40 வயதான இவர் ரோம் அருகே உள்ள டெரமா என்ற நகரில் வசித்து வருகிறார். இவர் 10 வயது சிறுமியை பாலியல் ரீதியாக சித்திரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து டேவிட் கைது செய்யப்பட்டார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அவர் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டை டேவிட் தற்போது ஒத்துக் கொண்டுள்ளார். இதையடுத்து விரைவில் அவர் மீதான வழக்கின் விசாரணை தொடங்கவுள்ளது. அவருக்கு 14 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என டேவிட்டின் வக்கீல் கியோவன்னி ஜெபியா கூறியுள்ளார். இதுகுறித்து ஜெபியா கூறுகையில், டெரமா நகரில் உள்ள தனது வீட்டில் டேவிட் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அங்குள்ள கான்வென்ட்டில் வார இறுதி பிரார்த்தனையில் அவர் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. தற்போது தனது வீட்டில் பிரார்த்தனை செய்து கழித்து வருகிறார் டேவிட் என்றார் ஜெபியா. கடந்த ஆண்டு டிசம்பர் 19ம் தேதி டேவிட்டின் பெற்றோர் வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த நிலையில், அப்பகுதியில் உள்ள 10 வயது சிறுமி டேவிட் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது அவருக்கு சான்டா கிளாஸ் பொம்மையைப் பரிசாக அளித்த டேவிட், அச்சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். சிறுமியின் அந்தரங்க பகுதிகளில் கையை வைத்து அக்கிரமம் செய்துள்ளார். அவரிடமிருந்து மீண்டு வந்த சிறுமி தனது பெற்றோரிடம் இதைத் தெரிவிக்கவே அவர்கள் போலீஸில் புகார் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து டேவிட் கைது செய்யப்பட்டார். தற்போது தனது குற்றத்தை அவர் ஒத்துக் கொண்டதால் அவர் மீதான விசாரணை விரைவில் தொடங்கவுள்ளது. அவருக்கு 14 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. 1987ம் ஆண்டு பாதிரியாராக நியமிக்கப்பட்டவர் டேவிட். அதன் பின்னர் அவர் இத்தாலிக்கு வந்து அங்கு செயல்படத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

உன்னை இந்தக் கேள்வி கேட்க விரும்புகிறேன். இன்றைக்கு நீ திடீரென்று மரித்தால், உன்ஆவி உன்னை விட்டுப் பிரிந்தால், உன் ஜீவன் உன்னில் இருந்து எடுக்கப்பட்டால், உன் உயிர் இன்றைக்குப் போனால், உன் ஆத்மா எங்கேபோகும்? நீ மோட்சம் போவாயா? நரகம் போவாயா? இதைக் குறித்து நீ ஒருபோதும் நினைத்திராமல் இருந்திருக்கலாம். இன்றைக்கு, உன்ஜீவனை தம் கையில் வைத்திருக்கும் தேவனுடைய சமூகத்தில் உன்னை நிறுத்தி, இதை வாசிக்கும் உன்னிடத்தில், இதை வாசிக்கும்உன்னிடத்தில் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன். இன்றைக்கு நீ மரித்தால், உன் ஆத்துமா எங்கே போகும்?

நீ மரிக்க மாட்டாயா? சுகமும் பலமும் இருக்கிறதென்று தேற்றிக் கொள்கிறாயோ? ஜாக்கிரதை. உன் சுகத்திற்கு ஒரு முடிவு வரும். உன்அழகுக்கு ஒரு முடிவு வரும். உன் ஆடம்பரத்திற்கு ஒரு முடிவு வரும். உன் படிப்புக்கு ஒரு முடிவு வரும். உன் உல்லாசத்திற்கு ஒரு முடிவுவரும். உன் வாலிபத்திற்கு ஒரு முடிவு வரும். உன் ஷோக்குக்கு ஒரு முடிவு வரும். உன் ஆடம்பரத்திற்கு ஒரு முடிவு வரும். உன் குடும்பவாழ்க்கைக்கு ஒரு முடிவு வரும். ஒருவேளை அது இறைக்கே, இன்னும் கொஞ்ச நேரத்தில் இருக்கலாம். உன் வாழ்நாள் கொஞ்சமே, உன்ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலம் தோன்றி பின்பு தோன்றாமல் புகைகின்ற புகையைப்போல் இருக்கிறது.” (யாக்கோபு.4:14).

ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான். அவன் பூவைப்போலப் பூத்துஅறுப்புண்கிறான்; நிழலைப்போல நிலைநிற்காமல் ஓடிப்போகிறான்ஒரு மரத்தைக்குறித்தாவது நம்பிக்கையுண்டு; அதுவெட்டிப்போடப்பட்டாலும் திரும்பத் தழைக்கும், அதின் இளங்கிளைகள் துளிர்க்கும்; அதின் வேர் தரையிலே பழையதாகி, அதின் அடிக்கட்டைமண்ணிலே செத்தாலும், தண்ணீரின் வாசனையினால் அது துளிர்த்து, இளமரம்போலக் கிளைவிடும். மனுஷனோவென்றால் செத்தபின்ஒழிந்துபோகிறான், மனுபுத்திரன் ஜீவித்துப்போனபின் அவன் எங்கே? தண்ணீர் ஏரியிலிருந்து வடிந்து, வெள்ளம் வற்றிச்சுவறிப்போகிறதுபோல, மனுஷன் படுத்துக்கிடக்கிறான்; வானங்கள் ஒழிந்துபோகுமளவும் எழுந்திருக்கிறதும் இல்லை, நித்திரை தெளிந்துவிழிக்கிறதும் இல்லை” (யோபு.14:1,2,7-12).

நீர் மனுஷரை நிர்த்தூளியாக்கி, மனுபுத்திரரே, திரும்புங்கள் என்கிறீர். அவர்களை வெள்ளம்போல் வாரிக்கொண்டுபோகிறீர்; நித்திரைக்குஒத்திருக்கிறார்கள்; காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். அது காலையிலே முளைத்துப் பூத்து, மாலையிலேஅறுப்புண்டு உலர்ந்துபோம்” (சங்கீதம்.90:3,5,6).

அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது” (எபிரேயர்.9:27).

இந்த வேதவசனங்களின்படி உன் வாழ்நாள் நிலையற்றதாயிருக்கிறது. நீ நினையாத நேரத்தில், மரணம் உன்னைப் பிடிக்கும். நீ பாவத்தில்வாழ்ந்து, பாவியாய் மரித்தால், நிச்சயமாய் நரகம் போவாய். அங்கே அக்கினி அவியாமலும், புழு சாகாமலும் இருக்கும். அது கந்தகமும்அக்கினியும் எரிகிற கடல். அங்கே அழுகையும் பற்கடிப்பும் இருக்கும். அது புறம்பான இருள். நீ பாவியாய் மரித்தால், இந்த இடத்திற்குத்தான்போவாய். நீ மோட்சம் பரலோகம் போக வேண்டுமென்றால், உன் பாவங்களில் இருந்து விடுதலை, இரட்சிப்பு அடைய வேண்டும்.

நீ பாவியாய் மரிப்பதில், இயேசு இரட்சகருக்கு கொஞ்சமும் இஷ்டம் இல்லை. துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ?அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்” (எசேக்கியேல்.18:23). நண்பனே, உன்னை பாவங்களில் இருந்து விடுவித்து, நரக தண்டனைக்கு உன்னை விலக்கி இரட்சிக்க இயேசு காயப்பட்டுரத்தம் சிந்தியிருக்கிறார். இயேசு மரித்திருக்கிறார். உன்னை இரட்சித்து, பாவம் செய்யாதபடி உன்னைக் காத்துக் கொள்ள இயேசுஉயிரோடிருக்கிறார்! இந்த இயேசுவை, இன்றைக்கு நீ விசுவாசித்து, உன் இருதயத்திற்குள் விசுவாத்தால் ஏற்றுக் கொள். அப்பொழுது உன்எல்லா பாவங்களிலும் இருந்து விடுதலை பெற்று, பரலோகம் செல்வாய். நீ இயேசுவை வேண்டாம் என்று தள்ளினால், நீ நினையாத நேரத்தில்மரணம் உன்னை பிடிக்கும்போது, நீ மரித்து கீழே போவாய். ஆகையால் உன் இரட்சகர் இயேசுவின் மேல் விசுவாசம் வைக்கும்படியாகஅன்பாய் அவரிடத்தில் உன்னை இன்று அழைக்கிறோம். இயேசுவினிடத்தில் வா! நீ பரலோகம் போகலாம். இன்றைக்கு நீ மரித்தால் எங்கேபோவாய்?   திருடனைப் போல சாவு வரும் திடுக்கிடுவாய் நீயும் அப்போ! பாம்பின் வாயில் தவளை போல,
பரிதவிப்பாய், பரிதவிப்பாய்!
 (பழைய கைப்பிரதி ஒன்றில் இருந்து)

SATURDAY, 21 DECEMBER 2013 20:04 TAMILCH

அழுத்தி தொடர்ந்து வாசிக்கவும் 

கிறிஸ்தவ மாற்றம்

                                    

                            Tamil Songs

                                    

                           

கத்தோலிக்க திருச்சபை-කතෝලික සභාව


jesu ,tamil , bible, singala, srilanka,


கத்தோலிக்கம்-catholics- Catholicism

கத்தோலிக்க திருச்சபை அல்லது உரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church) மிகப்பெரிய கிறிஸ்தவ மதப்பிரிவாகும். டிசம்பர் 31, 2008 ஆம் ஆண்டு கணக்கின் படி 1,166,000,000 (ஒரு பில்லியன், 166 மில்லியன்) இறைமக்களை கொண்டதாக இப்பிரிவு இருக்கிறது. இவ்வடிப்படையில் கத்தோலிக்கமே உலகில் மிகப்பெரிய சமயப்பிரிவாகும். ஏனைய கிறிஸ்தவ மத பிரிவுகளைப்போலவே கத்தோலிக்கரும் இயேசுவை தங்களது கடவுளாகவும், தமத்திரித்துவத்தின் இரண்டாம் ஆளாகவும் ஏற்றுக்கொள்கின்றார்கள். திருத்தந்தை கத்தோலிக்கரின் உலகத்தலைவராவார்.

கத்தோலிக்க திருச்சபையின் சுயவரைவிலக்கணத்தின் படி கத்தோலிக்க திருச்சபை எனப்படுவது, இயேசுவின் தலைமைச்சீடரான பேதுருவின் வழிவருபவரின் தலைமையின் கீழ் ஏனைய ஆயர்களாலும் குருக்களாலும் வழிநடத்தப்படும் சமயமாகும். இங்கு இராயப்பரின் வழிவருபவராக திருத்தந்தை ஏற்றுக் கொள்ளப்படுகிறார். தற்போது பிரான்சிஸ் திருத்தந்தையாக கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்துகிறார். இவர் 266 ஆவது திருத்தந்தையாவார்.

இத்திருச்சபை ஒரே, புனித, கத்தோலிக்க, திருத்தூதர் வழிவருகின்ற (அப்போஸ்தலிக்க) சபையாக உள்ளது என்பது (திருச்சபையின் நான்கு அடையாளங்கள்) கத்தோலிக்க திருச்சபையின் நிலைப்பாடு ஆகும்.

கத்தோலிக்க திருச்சபை இயேசு மற்றும் அவரது பன்னிரண்டு சீடர் வழிவருவதாகும். இதில் முதன்மைச் சீடர் இராயப்பர் முக்கிய இடம் பெறுகிறார். இயேசுவால் தனக்கு பின்னர் தனது விசிவாசிகளை வழிநடத்தும்படி இராயப்பர் பணிக்கப்பட்டார். இயேசுவின் பின்னர்,புனித விவிலியத்தில் கூறப்பட்டுள்ளதன் படி, வேறுபட்ட போதனைகளுககு தமது விசுவாசத்தை விட்டுக்கொடுக்காது இராயப்பரதும் அவர் வழிவந்த பாப்பரசர்களதும் போதனைபடி வாழ்ந்த உண்மையான இயேசுவின் விசுவாசிகளே காத்தோலிக்க திருச்சபையின் மூல விசுவாசிகளாவார்கள். 'கத்தோலிக்க திருச்சபை' என்ற பெயர் ஆன்டியொக்கின் ஆயர் இக்னேசிய அவர்களால் எழுதப்பட்ட மடலொன்றில் முதன்முறையாக பாவிக்கப்பட்டதாக அறிஞர்கள் கருதுகிறர்கள்.

ஆரம்பத்தில் திருச்சபை பல நெருக்கடிகளுக்கு உள்ளானது. கி.பி. 4ம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் உரோமையில் சட்டபூர்வமாக்கப்பட்டது. கி.பி. 313 ஆம் ஆண்டு ரோமப் பேரரசன் கான்ஸ்டாண்டைன் வெளியிட்ட மிலான் ஏற்புகள் மூலம் உரோமை அரசு சமயங்கள் தொடர்பில் நடுவுநிலைமை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டது. அத்தோடு உரோமையில் கிறிஸ்தவர் அனுபவித்த அடக்குமுறைகள் முடிவுக்கு வந்தன. மேலும் கொண்ஸ்டன்டைன் நைசியா மன்றத்தைக் கூட்டி(Council of Nicea) அப்போது திருசசபயில் தோன்றியிருந்த ஆரியவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். இக்கூட்டத்தில் பின்னர் வெளியிடப்பட்ட 'நைசின் விசுவாச அறிக்கை' (Nicene Creed) இன்றும் கத்தோலிக்க, கீழ் மரபு வழாத திருச்சபைகளால் ஏற்றுகொள்ளப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. கான்ஸ்டாண்டைன்குப் பின்னர், தியோடியஸ் எனும் மற்றொரு பேரரசர் கிறித்தவராக ஞானஸ்னானம் செய்யப்பட்டு, கி.பி. 380 ஆம் ஆண்டு தொடக்கம் கிறிஸ்தவம் உரோமையின் அரச சமயமாக உயர்ந்தது.



இயேசுவின் தலைமைச்சீடர் புனித இராயப்பரின் சிலை
11 ஆம் நூற்றாண்டில் திருச்சபை பெரும் கருத்து முரண்பாட்டை (Great Schism) எதிர்நோக்கியது. பொதுவாக 1054 ஆம் ஆண்டு இது தோன்றியதாக கூறப்பட்டாலும், இது பல தாசப்த்தங்களாக காணப்பட்ட கருத்து வேறுபாடுகளின் விளைவாகும். இதன் போது கத்தோலிக்க திருச்சபைக்கும் கீழ் மரபு வழாத திருச்சபைக்குமிடயே சபை முகாமை,சமயபோதனைகள் (liturgical), சமய கோட்பாடுகள் (doctrine) தொடர்பில் கருத்து வேறுபாடுகள் தோன்றியது. முக்கியமாக பாப்பரசரின் தலைமை மற்றும் இயேசு மற்றும் பரிசுத்த ஆவி தொடர்பான சமய போதனை வேறுபாடு முக்கிய இடம் வகித்தது. இறுதியில் இவ்விரு திருச்சபைக்களும் பிரிந்தன. இரண்டாம் இலியோன்ஸ் மன்றம், 1274 மற்றும் பசெல் மன்றம், 1439 இவ்விரு திருச்சபைகளையும் இணைக்க முயன்றது எனினும் இன்று வரை இத்திருச்சபைககள் பிரிந்தே செயற்படுகின்றன. இவ்விரு திருச்சபைகளும் நைசின் விசுவாச அறிக்கையில் கூறப்பட்ட ஓரே,புனித,கத்தோலிக்க,அப்போஸ்தலிக திருச்சபை தாமே என உரிமை கோறிவருகின்றன. அது முதல் சில கீழ் மரபு வழாத திருச்சபைகள் பாப்பரசரின் தலைமையை எற்று கத்தோலிக்க திருச்சபையுடன் இணைந்துள்ளன.

திருச்சபையின் இரண்டாவது பெரிய பிரிவினை சமய சீர்த்திருத்தவாதத்தால் ஏற்பட்டது. இதில் பாப்பரின் தலைமை, திருச்சபையின் சமய கோட்பாடுகள், மேலும் சபையில் அப்போதிருந்த நடைமுறைகள் என்பவற்றை பிழையென கருதிய பல குழுக்கள் திருச்சபையிலிருந்து பிரிந்து சென்றன. இது கத்தோலிக்க திருச்சபைக்குள் சீர் திருத்தத்துக்கு வழிகோலியது. இந்நோக்கத்துக்காக டெரன்ட் மன்றம் 1545, கூட்டப்பட்டு கத்தோலிக்க திருச்சபையின் பல கோட்பாடுகளையும் கொள்கைகளையும் சீர்த்திருத்தியது.

டெரன்ட் மன்றத்துக்குப் பிறகான மூன்று நூற்றாண்டுகள் இம்மன்றத்தின் சீர்த்திருத்தங்களை அமுல்படுத்துவதிலும் கிறிஸ்தவ கல்வியிலும் மற்றும் மறைப்பரப்பு பயணங்களிலும் திருச்சபை முக்கிய கவனமெடுத்துக்கொண்டது. இப்பணிகளில் 'இயேசு சபை' குருக்களும் 'பிரன்சிஸ்கன்' குருக்களும் முன்னின்று செயற்பட்டனர். 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் சமய சீர்த்திருத்தவாதிகளால் மட்டுமல்லாது விஞ்ஞான வளர்ச்சி, கைத்தொழில் புரட்சி போன்ற வற்றாலும் திருச்சபை பல சவால்களை எதிர்நோக்கியது.

முதலாம் வத்திக்கான் சங்கம் (1869-1870), இரண்டாம் வத்திக்கான் சங்கம் (1962–1965) போன்ற மன்றங்கள் அவ்வப்போதிருந்த பாப்பரசர்களால் கூட்டப்பட்டு கத்தோலிக்க திருச்சபை காலத்துகேற்றவாரு புதுப்பிக்கப்பட்டது.


இரண்டாம் வத்திக்கான் சங்கம் ரோம் நகரில் 1962 முதல் 1965 வரை ஒவ்வொரு ஆண்டும் இலையுதிர் காலத்தில் நடைபெற்றது. பாப்பரசர் அருளப்பர் XXIII முதலாவது ஆண்டில் தலைமை வகித்தார். பின்னர் பாப்பரசர் ஆறாம் சின்னப்பர் கூட்டங்களை தொடர்ந்து நிறைவு செய்தார். கத்தோலிக்க திருச்சபையை புதுப்பித்தலும் கிறிஸ்தவ மறுஒன்றிப்புமே இச்சங்கத்தின் முக்கிய குறிக்கோள்கள். இச்சங்கம் உருவாக்கிய இரண்டு முக்கிய ஏடுகள் - சமய சுதந்திரம் (Dignitatis Humanae) மற்றும் நவீன உலகில் திருச்சபையின் மேய்ப்புப்பணி அமைப்பு (Gaudium et Spes) ஆகியனவாகும்.

சங்கத்தின் பரிந்துரைப்படி கத்தோலிக்க சபை வழிபாடுகள் பெருமளவில் மாற்றப்பட்டன. லத்தீன் மொழி பலிப்பூசை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, புதிய பலிப்பூசை அவரவர் சொந்த மொழியில் நிறைவேற்ற ஆவன செய்யப்பட்டது. இதைத் தவிர வழிபாடுகளில் குரு (Priest) விரும்பினால் உள்ளூர் கலாச்சாரப்படி சில மாற்றங்கள் செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் பரப்பப் பட்டது. இதனை 'இரண்டாம் வத்திக்கான் சங்க ஒளி' யில் செய்வதாக அவ்வாறு செய்பவர்கள் கூறிக்கொள்கின்றனர். (சங்க 'ஒளி' எனப்படுவது சங்க ஏடுகளில் எழுதி பிரகடனப்படுத்தப்பட்ட கொள்கைகள் அல்ல. மாறாக, அவற்றில் இருந்து தர்க்க ரீதியாக பெறப்பட்டதாக சொல்லப்படும் சார்பு கொள்கைகள். ஆனால், கத்தோலிக்க குருமாரிடையே இவை பற்றிய ஒருமித்த கருத்து இன்றளவும் இல்லை). எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையும் இச்சங்க 'ஒளி' யில் காணப்படுவதாக சிலர் கூறுகின்றனர். லத்தீன் மொழி பலிப்பூசையை பல விசுவாசிகள் விரும்பியதால் தற்போதய திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், இறை மக்கள் விரும்பினால் லத்தீன் மொழி பலிப்பூசையை வழங்கலாம் என்று அண்மையில் உத்தரவிட்டுள்ளார்.

இச்சங்க கோட்பாடுகளைப் விரும்பாதவர்கள், பல்வேறு புராதன கத்தோலிக்க சபைகளை உருவாக்கியுள்ளனர். பேராயர் லெபபர் (Archbishop Marcel) உருவாக்கிய பத்தாம் பத்திநாதர் சபை இவற்றில் முக்கியமானது. இன்னும் சில கத்தோலிக்க பொதுமக்கள் கத்தோலிக்க வழிபாடுகளில் பக்தி குறைந்து விட்டது என்று பெந்தெகோஸ்தே சபைகளுக்கு தங்களை மாற்றிக்கொண்டனர்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

 christian ,tamil, singala
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 13 ஜூலை, 2014 - 11:38 ஜிஎம்டி

BBC News
கத்தோலிக்கத் திருச்சபை பாதிரிமார்களின் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் போப்பாண்டவர் பிரான்சிஸ் ஏற்கனவே கவலை வெளியிட்டருந்தார்.
கத்தோலிக்கத் திருச்சபையில் பாதிரியார்கள் திருமணம் செய்துகொள்ள இருந்துவரும் தடையை காலப்போக்கில் தளர்த்த முடியும் என்று தான் நம்புவதாக போப்பாண்டவர் ஃபிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
பாதிரியார்கள் பிரம்மச்சாரிகளாகவே வாழ வேண்டும் என்று 11 நூற்றாண்டு காலமாக இருந்துவருகின்ற விதிமுறையை மாற்றுவதற்கான தீர்வுகள் உண்டு என்றும், அவற்றைத் தேடிக் கண்டுபிடிப்பது தனது வேலை என்றும் பாப்பரசர் தெரிவித்தார்.
இத்தாலிய செய்தித்தாளான லா ரிபப்ளிக்காவுக்கு அளித்த ஒரு பேட்டியில், பாதிரியார்களின் சிறார் பாலியல் துஷ்பிரயோக விவகாரம் கத்தோலிக்கத் திருச்சபையை பீடித்துள்ள தொழுநோய் என்று ஃபிரான்சிஸ் கூறினார்.
பேராயர்களிலும், கார்டினல்களிலும் கூட சிறார் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டவர்கள் இருக்கிறார்கள் என்றும், கத்தோலிக்கத் திருச்சபை பாதிரிமாரிகளில் சுமார் இரண்டு சதவீதம் பேர் சிறார்களைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேவையான கண்டிப்போடு இப்பிரச்சினைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தான் உறுதியுடன் இருப்பதாய் அவர் தெரிவித்துள்ளார்.



Montag, 14. Juli 2014

John யோவான்6:43-51


John யோவான்6:43-51

43 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: உங்களுக்குள்ளே முறுமுறுக்கவேண்டாம்.
44 என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.
45 எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே; ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்.
46 தேவனிடத்தினின்று வந்தவரே தவிர வேறொருவரும் பிதாவைக் கண்டதில்லை, இவரே பிதாவைக் கண்டவர்.
47 என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
48 ஜீவ அப்பம் நானே.
49 உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள்
50 இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே.
51 நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்.

BBC news


BBC news කතෝලික සභාව
கர்தினால் லூர்துசாமி வாட்டிகனில் மரணம்
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 4 ஜூன், 2014 - 20:45 ஜிஎம்டி

கத்தோலிக்கத் திருச்சபையில் கர்தினால் பதவி வரை உயர்ந்த ஒரே தமிழரான துரைசாமி சைமன் லூர்துசாமி ஜூன் மாதம் 2ஆம் தேதியன்று காலமானார்.
1924ஆம் வருடம் பிப்ரவரி 5ஆம் தேதியன்று பிறந்த இவர், ரோமன் க்யூரியாவில் பணியாற்றிய ஒரே ஆசியக் கண்டத்தவர்.

செஞ்சியிலுள்ள கல்லேரி என்ற சிற்றூரில் பிறந்த இவர், திண்டிவனம், கடலூர் ஆகிய நகரங்களில் தனது பள்ளிக் கல்வியைப் பெற்றவர்.
கல்லூரிக் கல்வியை சென்னை லயோலா கல்லூரியில் படித்த இவர், திருச்சபை சட்டக் கல்வியை ரோமில் படித்து, டாக்டர் பட்டம் பெற்றார். 1962ல் புதுவையில் ஆயராக நியமிக்கப்பட்ட அவர், 1968ல் பெங்களூர் பேராயராக நியமிக்கப்பட்டார். 71ல் ரோமிலிருக்கும் மறைபரப்புப் பேராயத்தின் இணைச் செயலராக உயர்ந்தவர் அடுத்த ஆண்டே ரோம் அர்பன் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார்.
1985ல் மே 25ஆம் தேதி திருத்தந்தை இரண்டாம் ஜான்பாலால் கார்தினலாக உயர்த்தப்பட்டார் லூர்துசாமி. 1996ல் கார்டினல் அருட்பணியாளர் என்ற நிலையைத் தேர்ந்துகொண்டார் லூர்துசாமி.
வியாழக்கிழமையன்று காலை பதினோரு மணிக்கு செயிண்ட் பீட்டர் பேராலய பீடத்தில் கார்தினல் குழுத் தலைவர் ஆஞ்சலோ சொடானோ அடக்கத் திருப்பலி ஆற்றியபிறகு, போப் பிரான்சிஸ் பிரியாவிடை ஜெபங்களைச் செய்யவிருக்கிறார்.
அதற்குப் பிறகு சனிக் கிழமையன்று அவரது உடல் புதுவைக்கு கொண்டுவரப்படுகிறது. அன்றும் ஞாயிற்றுக் கிழமையும் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டிருக்கும். பிறகு, திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு அவரது உடல் புதுவை தூய அமலோற்பவ அன்னை பேராலயத்தில் அடக்கம் செய்யப்படவிருக்கிறது.
இந்தியாவில் போப்பின் தூதரான சால்வாத்தோர் பென்னாச்சியோ உள்ளிட்ட இந்தியாவைச் சேர்ந்த பல பேராயர்கள் இந்த இறுதிச் சடங்கில் கலந்துகொள்கின்றனர்.
எளிமையும், கடின உழைப்பும் நிறைந்த மனிதராக அறியப்பட்ட கார்தினல் லூர்துசாமி, அவர் பெங்களூர் மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றியபோது, அதனை ஒரு முன்மாதிரி மறைமாவட்டமாக்க அவர் ஆற்றிய பணிகள் இப்போதும் நினைவுகூரப்படுகின்றன.


BBC news
இரு முன்னாள் போப்பாண்டவர்கள் புனிதர்களாக பிரகடனம் - காணொளி
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 27 ஏப்ரல், 2014 - 11:17 ஜிஎம்டி
கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமைப் பீடமாம் வத்திகானத்தில் இதற்கு முன்பெப்போதும் இல்லாத விதமாக நடந்த ஒரு வைபவத்தில், முன்னாள் போப்பாண்டவர்களான 23ஆம் ஜான் அவர்களையும் இரண்டாம் ஜான் பால் அவர்களையும் இந்நாள் பாப்பரசரான பிரான்சிஸ் புனிதர்களாக அறிவித்துள்ளார்.
சரித்திரத்தில் முதல்முறையாக இரண்டு போப்பாண்டவர்கள் ஒரே நேரத்தில் புனிதர்களாக அறிவிக்கப்படுகின்ற இந்த வைபவத்தில் பிரான்சிஸுக்கு முன்பாக போப்பாண்டவராக இருந்த பெனெடிக்டும் கலந்துகொண்டுள்ளார்.
புனிதர்களாக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் போப்பாண்டவர்களின் பெரிய உருவப்படங்கள் வத்திகானத்திலுள்ள புனித பீட்டர் சதுக்கத்தை அலங்கரித்துள்ளன.
அங்கும் சுற்றியுள்ள வீதிகளிலுமாக ஏராளமான மக்கள் கூடி சிறப்பு திருப்பலி பூசையில் பங்கேற்று வருகின்றனர்.
இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக உலகெங்கிலும் இருந்தும் பல லட்சம் கத்தோலிக்கர்கள் ரோம் நகருக்கு வந்துள்ளனர்.
தவிர கோடிக்கணக்கானோர் இந்த வைபவத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பை பார்த்துவருகின்றனர்.
இவை குறித்த ஒலிக்குறிப்பற்ற ஒரு காணொளி.


சிறார் பாலியல் துஷ்பிரயோகம்: வத்திக்கான் மீது ஐ.நா கண்டனம்
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 5 பிப்ரவரி, 2014 - 15:39 ஜிஎம்டி

ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார்கள் ஆயிரக்கணக்கான சிறுவர், சிறுமியர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வதை அனுமதிக்கும் கொள்கைகளை, வத்திக்கான் , தொடர்ந்து கடைப்பிடித்தது என்று ஐ.நா மன்றம் விமர்சித்திருக்கிறது.
சிறார்களின் உரிமைகள் பாதுகாப்புக்கான ஐ.நா மன்றக் குழு, ( சி.ஆர்.சி), சிறார்களைத் துஷ்பிரயோகம் செய்ததாக அறியப்படும் அல்லது சந்தேகிக்கப்படும் பாதிரியார்களை போப் உடனடியாக அகற்றவேண்டும் என்று கூறியிருக்கிறது.
மேலும், ஒரு பாலுறவு, கர்ப்பத்தடை மற்றும் கருச்சிதைவு ஆகிய விஷயங்கள் குறித்து வத்திக்கானின் அணுகுமுறைகளையும் அது கடுமையாக விமர்சித்திருக்கிறது.
ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமைப் பீடமான வத்திக்கான், ஏற்கனவே , திருச்சபைக்குள் சிறார்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுக்க கமிஷன் ஒன்றை நியமித்திருக்கிறது.
இந்த கமிட்டியின் அறிக்கை வத்திக்கானைக் கட்டுப்படுத்தாது. அதன் பரிந்துரைகளை அமல்படுத்தும் அதிகாரங்கள் கொண்ட அமைப்பும் அங்கு இல்லை.
'குற்றமிழைத்தப் பாதிரியார்களுக்குப் பாதுகாப்பு'
தாங்கள் செய்த குற்றங்களை மறைத்தபாதிரியார்கள் குறித்த கோப்புகளை போப் வெளிப்படுத்த வேண்டும், அதன் மூலம் அவர்கள் மீது பொறுப்பை சுமத்த முடியும் என்று ஐ.நா மன்ற சிறார்கள் உரிமைக் குழு தனது அறிக்கையில் கூறியிருக்கிறது.
நடந்த குற்றங்களின் அளவை போப் ஒப்புக்கொள்ளவில்லை என்பது பற்றி தாங்கள் கவலை அடைந்திருப்பதாகவும் ஐ.நா குழு கூறியது.
குற்றமிழைத்த பாதிரியார்களை அவர்கள் பங்குத் தந்தையாக இருக்கும் பகுதியிலிருந்து வேறொரு பகுதிக்கு இடம் மாற்றுவது, சில சமயங்களில் நாடு விட்டு நாடு மாற்றுவது போன்ற நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்ட்தையும் அது கண்டித்திருக்கிறது.
பல நாடுகளில் சிறுவர் சிறுமியர் இன்னும் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்படக்கூடிய ஆபத்தில்தான் இருக்கிறார்கள் என்றும், இக்குற்றத்தில் ஈடுபட்ட பல பாதிரியார்கள் இன்னும் சிறார்களுடன் தொடர்பில்தான் இருப்பதாக்க் கூறப்படுதாகவும் இந்தக் குழு கூறியது.
கடந்த மாதம் வத்திக்கான் அதிகாரிகளை ஐ.நா குழு வெளிப்படையாக விசாரணை செய்து, இது குறித்த தகவல்களை வத்திக்கான் ஏன் வெளியிடக்கூடாது என்றும், எதிர்காலத்தில் இது போன்ற துஷ்பிரயோகங்கள் நடக்காமல் இருக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் கேள்விகளை எழுப்பியது.
ஆனால் துஷ்பிரயோகங்கள் குறித்த தரவுகளை, மற்றொரு நாடு கேட்டால் மட்டுமே, அதுவும், சட்டரீதியான நடவடிக்கைகளின் ஒரு அங்கமாகவே, தன்னால் தரமுடியும் என்று கூறி, ஐ.நா மன்றத்தின் கோரிக்கையை டிசம்பரில் வத்திக்கான் நிராகரித்துவிட்டது.
வத்திக்கான் கருத்து
இந்த விசாரணை அறிக்கை குறித்து தீவிரமாக ஆராயப்படும் என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது.
கருக்கலைப்பு, கருத்தடை மற்றும் ஒருபால் உறவு ஆகியவை குறித்த தமது நிலைப்பாட்டையும் கத்தோலிக்கத் திருச்சபை திருத்திக் கொள்ள வேண்டும் என்ற ஐ நாவின் அறிவுரைகள் கத்தோலிக்க போதனைகளில் குறுக்கிடும் ஒரு நடவடிக்கையாகவே உள்ளது என்று வத்திக்கான் பதிலடி கொடுத்துள்ளது.



சிறார் பாலியல் துஷ்பிரயோகம்: 2 ஆண்டுகளில் 400 பாதிரியர் நீக்கம்
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 18 ஜனவரி, 2014 - 11:17 ஜிஎம்டி

சிறார் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பான குற்றச்சாட்டில் வத்திக்கான் திருச்சபை தலைமை பீடத்தால் மதபோதகர் அந்தஸ்து பறிக்கப்பட்ட கத்தோலிக்க பாதிரியரின் எண்ணிக்கை விபரங்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் பாப்பரசர் பெனடிக்ட், 2011-ம், 2012-ம் ஆண்டுகளில் கிட்டத்தட்ட 400 பாதிரியரை மதபோதகர் பொறுப்புகளிலிருந்து நீக்கியுள்ளதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

கடந்த ஆண்டுகளில் மதகுரு பொறுப்புகளிலிருந்து தடைசெய்யப்பட்ட பாதிரிமாரிலும் பார்க்க இந்த எண்ணிக்கை மிகப் பெரிய அதிகரிப்பு என்று கருதப்படுகிறது.
ஜெனீவாவிலுள்ள ஐநா ஆணையத்தின் முன்பாக இந்த வாரத்தின் ஆரம்பத்தில் ஆஜரான வத்திக்கான் அதிகாரிகள் சமர்ப்பித்திருந்த ஆவணங்களிலேயே இந்த புள்ளிவிபரங்கள் தெரியவந்துள்ளன.
பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கு உள்ளான சம்பவங்களை மட்டுமே வத்திக்கான் திருச்சபை இதுவரை அறிக்கையிட்டுள்ளது.
பாதிரிமாரின் பாலியல் துஷ்பிரயோக விவகாரங்களை கத்தோலிக்க திருச்சபை தலைமை மூடிமறைத்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் இருந்துவருகின்றன.
இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சிவில் அதிகாரிகளுக்கு முறையிடாமல், சம்பந்தப்பட்ட பாதிரிமாரை வேறு கத்தோலிக்க பங்குப் பிரிவுகளுக்கு இடமாற்றம் செய்துள்ளமை தொடர்பில் வத்திக்கான் மீது விமர்சனங்கள் உள்ளன.








BBC news
'அல்லா' வழக்கு:கிறித்தவர்கள் மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் தள்ளுபடி
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 23 ஜூன், 2014 - 05:31 ஜிஎம்டி
மலேசியாவில் சிறுபான்மைக் கிறித்தவர்கள் தங்கள் கடவுளைக் குறிக்க 'அல்லா' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவற்கு எதிராக உயர்நீதிமன்றம் விதித்த தடையை அந்நாட்டின் உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது.
இது தொடர்பாக நாட்டின் கத்தோலிக்கர்கள் தொடர்ந்த வழக்கின் மேல் முறையீட்டு மனுவை நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4- 3 என்ற வாக்குகளில் நிராகரத்து தள்ளுபடி செய்தனர்.

மலேசியாவில் 2007லிருந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரம், கத்தோலிக்கத் திருச்சபையின் செய்திப் பத்திரிகையான, 'ஹெரால்ட்' இதழால் 2009ல் முதலில் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. முதல் நீதிமன்றத்தில் கத்தோலிக்கர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்தது. ஆனால் அதை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
பின்னர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கத்தோலிக்கர்கள் உச்சநீதிமன்றத்துக்கு மேல் முறையீடு செய்தனர்.
ஹெரால்ட் பத்திரிகையின் மலாய் மொழிப் பதிப்பில், முதலில் அல்லா என்ற சொல் கடவுளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டதை எதிர்த்து எழுந்த சர்ச்சையை அடுத்து, அரசால் இந்தப் பதத்தை கிறித்தவர்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது.
ஆனால், கடவுள் என்ற பொருளில் வழங்கப்படும், அல்லா என்ற சொல்லை, தங்கலது கடவுளைக் குறிக்கப் பல நூற்றாண்டுகளாகவே தாங்கள் பயன்படுத்திவருவதாகக் கிறித்தவர்கள் வாதிட்டனர். இந்த வார்த்தையை மலாய் மொழியில் கடவுளர்களைக் குறிக்க அனைத்து மதத்தினரும் பயன்படுத்துகின்றனர்.
ஆனால் இந்த வார்த்தையைக் கிறித்தவர்கள் பயன்படுத்துவது முஸ்லீம்களைக் குழப்பிவிடும் என்றும், சில முஸ்லீம்கள் மதம் மாறவும் அது வழி செய்யும் என்றும் அரசு கூறியது.
இந்தத் தீர்ப்பு தங்களுக்கு ஏமாற்றமளிப்பதாக, ஹெரால் பத்திரிகையின் ஆசிரியர் அருட்தந்தை லாரான்ச் ஆண்ட்ரூ கூறினார். இது சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைப் பற்றி எதுவும் கூறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஆனால் நீதிமன்றத்துக்கு வெளியே காத்திருந்த முஸ்லீம் ஆர்வலர்கள் இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இந்தத் தீர்ப்பு வழக்குகள் முடிவடைவதைக் குறிப்பதாகக் கூறிய திருச்சபைக்காக வாதாடிய வழக்கறிஞர் எஸ்.செல்வராஜா, முஸ்லீம் அல்லாதவர்கள் அல்லா என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்கு ஒட்டுமொத்தத் தடையை இது விதிப்பதாகக் கூறினார்.
ஆனால் இந்தத் தீர்ப்பை மறு பரீசலனை செய்ய திருச்சபை கோரக்கூடும் என்று சில மலேசிய பத்திரிகைகளில் வெளிவந்திருக்கும் செய்திகள் கூறுகின்றன.

BBC news
தொலைக்காட்சி பாடகர் போட்டியில் 25 வயது கன்னியாஸ்திரி வெற்றி
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 6 ஜூன், 2014 - 09:58 ஜிஎம்டி

உலகத் தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சியான த வாய்ஸ்பாடகர் போட்டியின் இத்தாலிய வடிவ நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் கத்தோலிக்க கன்னியாஸ்திரி ஒருவர் வெற்றிபெற்றுள்ளார்.
இந்தப் போட்டியில் பங்குகொண்டது முதல் அருட்சகோதரி ஸோர் கிறிஸ்தீனா இணையதளம் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றிருந்தார்.
கன்னியாஸ்திரி உடையுடன் கழுத்தில் சிலுவையுடன் ஸோர் கிறிஸ்தீனா தனது வெற்றிக்காக கடவுளுக்கு நன்றி கூறினார்.
இவர் முதன்முதலாக இந்தப் போட்டிக்குத் தெரிவாவதற்காகப் பாடிய பாடல் ( Alicia Key- இன் No One என்ற பாடல்) யூடியூப் இணையதளத்தில் ஏற்கனவே 50 மிலியன் தடவைகளுக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது.
ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையை சாதாரண மக்களிடம் மேலும் நெருக்கமாகக் கொண்டுசெல்ல வேண்டும் என்ற பாப்பரசர் பிரான்சிஸின் வேண்டுகோளை பின்பற்றியே தான் இந்தப் போட்டியில் பங்குபற்றியதாக 25 வயதான அருட்சகோதரி கிறிஸ்தீனா கூறினார்.

BBC news
பாதிரியாரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டோருடன் போப் இன்று சந்திப்பு
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 7 ஜூலை, 2014 - 06:39 ஜிஎம்டி


ரோமன் கத்தோலிக்கப் பாதிரியார்களால் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டவர்களை போப் பிரான்ஸிஸ் இன்று திங்கட்கிழமையன்று சந்திக்கிறார்.
பிரிட்டன், ஜெர்மனி மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளில் இது போன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்ட ஆறு பேரும் அவர் தினசரி நடத்தும், தனியான காலை நேர வழிபாடு ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு பின்னர் அவருடன் பேசுவார்கள்.


போப் பிரான்ஸிஸ் 16 மாதங்களுக்கு முன்னர் போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து இத்தகைய சந்திப்பு நடப்பது இதுவே முதன் முறையாகும்.

இது போல ரோமன் கத்தோலிக்கப் பாதிரியர்களின் பாலியல் துஷ்பிரயோகத்தைத் தான் சகித்துக்கொள்ளப் போவதில்லை என்று கூறியிருக்கும் போப் பிரான்ஸிஸ், இதைக் கையாள்வது திருச்சபையின் நம்பகத்தன்மைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறியிருக்கிறார்.

ஆனால் பாதிக்கப்பட்டவர்களை முன்பே சந்திக்காதது குறித்து அவர் மீது விமர்சனங்கள் எழுந்திருந்தன.

குற்றம் செய்யும் பாதிரியார்களை எப்படிக் கையாள்வது என்பது குறித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு எத்தகைய பாதுகாப்பு வழங்குவது என்பது குறித்தும் பரிசிலிக்க குழு ஒன்றை போப் அமைத்திருக்கிறார்.


Translate

Powered By Blogger

Beliebte Posts

https://plus.google.com/+DavidJayanadanAppukutti/posts